menu Home
Spirituality

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் | Aani Thirumanjanam festival at Chidambaram Nataraja temple

Bhakti Teacher | July 4, 2025


கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘சிவ சிவ’ முழக்கத்துடன் நடராஜ பெருமானை தரிசித்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ நிகழ்வு கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 30-ம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு ரதஙகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இரவு தேரில் இருந்து மேள​தாளம் முழங்க கோயிலுக்கு வந்த ஸ்ரீ சிவ​காமசுந்​தரி அம்​பாள் சமேத நடராஜ மூர்த்​திக்கு ஏககால லட்​சார்ச்​சனை நடை​பெற்​றது.

இதைத்​தொடர்ந்து முக்​கிய திரு​விழா​வான ஆனித் திரு​மஞ்சன தரிசன விழா நேற்று நடை​பெற்​றது. அதி​காலை 4 மணி தொடங்கி 6 மணி வரை ஆயிரங்​கால் மண்டப முகப்பு பகு​தி​யில் சுவாமிக்​கும் அம்​பாளுக்​கும் மகா அபிஷேகம் நடை​பெற்​றது. காலை 10 மணிக்கு சித்​சபை​யில் ரகசிய பூஜை​யும், பின்​னர் பஞ்​சமூர்த்​தி​கள் வீதி உலா​வும் நடந்​தது.

ஆயிரங்​கால் மண்​டபத்​தில் சுவாமி​யும், அம்​பாளும் திரு​வாபரண அலங்​காரத்​தில் பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தனர். அதனை தொடர்ந்து பிற்​பகல் 2.50 மணிக்கு ஆனித் திரு​மஞ்சன தரிசனம் நடை​பெற்​றது. ஆயிரங்​கால் மண்​டத்​தில் இருந்து தீவட்டி முன்னே செல்ல, மேள​தாளங்​கள், வேத மந்​திரங்​கள் முழங்க, ஓது​வாமூர்த்​தி​கள் தேவாரம், திரு​வாசகம் பாட, நடராஜரும், சிவ​காமசுந்​தரி அம்​பாளும் முன்​னுக்​கும், பின்​னுக்​கும் சென்று நடன​மாடியபடியே பக்​தர்​களுக்கு தரிசனம் தந்​த​படியே சித்​சபைக்கு பிர​வேசம் செய்​தனர்.

முத்​துப்​பல்​லக்கு வீதி உலா​: இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர். இன்று (ஜூலை.3) பஞ்​சமூர்த்தி முத்​துப்​பல்​லக்கு வீதி உலா​வுடன் திரு​விழா நிறைவடைகிறது. இதற்​கான ஏற்​பாடு​களை கோயில் பொது தீட்​சிதர்​கள் செய்​திருந்​தனர். திரு​விழாவை முன்​னிட்டு நான்கு வீதி உள்​ளிட்ட இடங்​களில் பல்​வேறு அமைப்​பு​கள் சார்​பில் அன்​ன​தானம் அளிக்​கப்​பட்​டது.

ஆனித் திரு​மஞ்​சனத்தை யொட்டி கடந்த இரு நாட்​களாக சிதம்​பரம் நகரமே விழாக்கோலம் பூண்​டிருந்​தது. கடலூர் எஸ்​பி. எஸ். ஜெயக்​கு​மார் தலை​மை​யில் சிதம்​பரம் டிஎஸ்பி லாமேக் மற்​றும் 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார்​ பாது​காப்​பு பணி​யில்​ ஈடு​படு​பட்​டுள்​ளனர்​.சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.